யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடலில் இறங்கி மீன் பிடித்த கடற்தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குருநகரை சேர்ந்த அலோசியஸ் ஜான்சன் (வயது 40) எனும் கடற்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
கடலில் இறங்கி வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை , கடற்தொழிலாளி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரை சக தொழிலாளிகள் தேடிய போது , அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments