Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் 14 தமிழக மீனவர்கள் கைது!


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த  கடற்படையினரால் குறித்த 14 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகொன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை நாளைய தினம் வியாழக்கிழமை  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments