Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

போதைப்பொருள் வழக்குகளின் விளக்கமறியல் கைதிகளை யாழ். சிறையில் சந்தித்த ஆளுநர்!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிடவே சிறைச்சாலைக்கு சென்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயும் நோக்குடன்,  யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை ஆளுநர்  விஜயம் மேற்கொண்டு இருந்தார். 

விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 38 விளக்கமறியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன்.
 குறிப்பாக அவர்கள் ஏன் இந்த போதை பொருளை பாவித்தார்கள் ? என்ன போதை பொருளை பாவித்தார்கள்? போன்ற விடயங்களை கேட்டு அறிந்து கொண்டேன்.

அவர்கள் இங்கிருந்து விடுதலையாகி சென்ற பின்பும் போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகாதவாறு , ஏதாவது ஒரு வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு வேலை திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த வேலை திட்டத்தினை நாங்கள் விரைவாக ஆரம்பிக்க வேண்டும்.

குறிப்பாக போதைப் பொருளோடு சம்பந்தப்பட்டு கைது செய்யப்படும் நபர் 3 தொடக்கம் ஆறு மாதங்களாவது சிறைச்சாலையில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
 எனவே அவ்வாறான காலப்பகுதியில் அவர்கள் தங்களது வாழ்வியலை முன்னோக்கி கொண்டு போகக்கூடிய சில வேலை திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளேன் என மேலும் தெரிவித்தார். 

No comments