Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாங்கள் உயிர் பிழைக்க நிலங்களை தாருங்கள் என போராடி வந்தவர் காலமானார்!


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார். 

மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம் , ஒரு சிறந்த புகைப்பட கலைஞனும் ஆவார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "பழங்கால புகைப்படங்களின் திருவிழா 2020" (Jaffna vintage Photo Festival-2020) நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். 

வலி. வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 32 வருட காலங்களுக்கு மேல் வசித்து வரும் நிலையில் தனது கடைசி காலம் வரையிலும்  , அந்த மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராடி வந்தவராவார் 

மயிலிட்டியை சேர்ந்த 700 மீனவகுடும்பங்களும் பலாலியை சேர்ந்த 2000ம்  குடும்பங்களும் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றன எனவும் , நாங்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என போராடி வந்த குணபாலசிங்கம், ஜனாதிபதியை சந்தித்து,  எங்கள் துயரங்களை முன்வைப்பதற்காக வாய்ப்பை வழங்கவேண்டும் என கடந்த ஒக்டோபர் மாதம் கோரிக்கையை முன் வைத்திருந்தார். 

அவரது கோரிக்கை நிறைவேறாத நிலையிலையே , அவர் காலமாகியுள்ளார். 






No comments