Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அச்சுவேலியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்பு




யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மோட்டார் சைக்கிள் அநாதரவாக இருந்தது.

அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவலளித்தனர். தகவலை அடுத்து மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments