Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொடிகாமத்தில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம்  கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம்  பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றினை அமைத்து அங்கு தங்குவதை வழமையாக கொண்டுள்ளார். 

இந்நிலையிலேயே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments