அறநெறி பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த இளைஞன் அங்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த மாணவி மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
கல்லோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் அறநெறி பாடசாலைக்குள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புகுந்த இளைஞன் ஒருவர் அங்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த 11ஆம் ஆண்டு மாணவி மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு கந்தளாய் ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இளைஞனின் காதலை மாணவி ஏற்காத காரணத்தாலயே மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments