Asian Paints causeway இன் கிளிநொச்சி மாவட்ட விநியோகத்தராகிய நிகல்யா நிகழ்ழரசி வாணிபமானது தமது மூன்றாவது கிளையினை உருத்திரபுரம் கிளிநொச்சியில் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்துள்ளது.
உரிமையாளர் திரு E.விஜயசிங்கம் மற்றும் Asian Paints causeway நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய நிறைவேற்று சந்தைப்படுத்தல் முகமையாளர் திரு. R.ரோய் சத்தியசுதாகர் தலைமையில் இந்தக் கிளை திறந்துவைக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய உரிமையாளர், தனது 25 வருடங்களுக்கு மேலான வியாபார அனுபவம், யுக்தி, மதிநுட்பத்துடன் கூடிய வாடிக்கையாளர் மற்றும் Asian Paints causeway நிறுவன பங்களிப்புமே வளர்ச்சிக்கான காரணம் என கூறியத்துடன், வாடிக்கையாளர் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பல சவால்களுக்கு மத்தியில் வியாபார சந்தையில் 25 வருடங்களுக்கு மேலாக நிலைத்து தன்னை நிலைநிறுத்தியுள்ள உரிமையாளரை பலரும் வாழ்த்தினர்.
No comments