Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஹஷிஸ் போதைபொருளுடன் 3 இந்திய பிரஜைகள் மன்னாரில் கைது!


மன்னார் கடற்பரப்பில் சுமார் 92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் கடலில் மறித்து சோதனையிட்டனர். 

இதன்போது, குறித்த படகில் மூன்று பெரிய பைகளில் அடைக்கப்பட்ட  95 சிறிய பொதிகளில்  ஹஷிஸ்  போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து படகில் இருந்த மூவரையும் கைது செய்த கடற்படையினர் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த படகினையும் , படகில் மீட்கப்பட்ட போதை பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

No comments