மன்னார், சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , பெண்ணொருவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எமில் நகர் பகுதியை சேர்ந்த சத்தியா (வயது 34) எனும் இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில்காயமடைந்தஹ் ஐவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்...
நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதனப்படுத்த பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில் மீண்டும் பிரச்சினை இடம்பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது. அதன் போது, பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில், இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments