Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அரச ஊழியர்களுக்கு கைரேகை கட்டாயம்


அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வருகையை உள்ளீடு செய்வதற்கு கைரேகை ஸ்கனர்களைப் பயன்படுத்துவது இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதையும் புறப்படுவதையும் உறுதிப்படுத்த கைரேகை ஸ்கானர்களைப் பயன்படுத்துவது 2009 இல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கொரோனா தொற்று நெருக்கடியின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை இடைநிறுத்தியது.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வருகையைக் குறிக்க கைரேகை ஸ்கானர்களின் பயன்பாடு ஆரம்பிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments