சார்க் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில், புதுமை படைப்பகத்தின் ஒருங்கிணைப்பில் , யாழ்ப்பாணம் , மானிப்பாய் மகளிர் கல்லூரியில் "ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், வளவாளர்களாக, வைத்திய அதிகாரி Dr.K.உதயசீலன், யாழ்.பல்கலைக்கழக உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.K.கஜவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
வளவாளர்கள் கருத்துரைக்கும் போது,
தற்போதைய சூழலில் இளவயதில் இருக்கும் மாணவிகளாகிய நீங்கள், உடனடியான கனதியான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதேவேளை சமூகத்தில் தற்போது நிகழ்கின்ற நெறி தவறிய போக்குத் தொடர்பிலும் விழிப்பூட்டல் கருத்துக்களை முன்வைத்தனர்.
புதுமை படைப்பக இயக்குநர் ஊடகவியலாளர் இளங்கீரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சார்க் ஊடக மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் சார்பாக ஊடகவியலாளர்கள் லியோ தர்ஷன், எம்.நியூட்டன், மனோச் சித்திரா ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர்.
No comments