அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய அவரது மனைவி படுகாயங்களுடன் நோயாளர்காவு வண்டியில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்துள்ளார்.
இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments