கிளிநொச்சி பெரிய பரந்தனில் நண்பிகள் இருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த சுரேஸ்குமார் தனிகை (வயது 17) மற்றும் லோகேஸ்வரன் தமிழினி (வயது 17) ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டில் ஒன்றாக உயிரை மாய்த்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்
சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
"எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை" என மாணவிகள் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments