யாழ்ப்பாணம் - நெல்லியடி மற்றும் பருத்தித்துறை கொமர்ஷல் வங்கி ஊழியர்கள் இணைந்து பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதிகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்தார்கள்.
அதன்போது, வங்கியால் பருத்தித்துறை நகரசபைக்கு கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் நன்கொடையாக கொமர்ஷல் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் திரு.இராமச்சந்திரன் சிவஞானத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் கடற்கரையை சூழ நிழல்தரும் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூழலியலாளர் மனோகரன் சசிகரன் கலந்து கொண்டார்
No comments