Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு


மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த அருச்சுனன் சுந்தரலிங்கம் (வயது 55) எனும் நபரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 31ஆம் திகதி மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த வேளை , இரத்த புடையன் பாம்பு அவரை தீண்டியுள்ளது. 

அதனை அடுத்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , கடந்த 16 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments