Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழில் தொடரும் மழை - ஆலயம் ஒன்று சேதம் ; 08 குடும்பங்கள் பாதிப்பு


யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 08குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  எட்டு குடும்பங்கள் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் நின்ற அரச மரம் ஆலயத்தின் மீது குடைசாய்ந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.  

No comments