மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில், C பிரிவில் சாம்பியனாக தெரிவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் எனும் மாணவனையும் போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில், மாணவர்களை போட்டிக்கு தயார் செய்த UCMAS Jaffna Town Center இன் தலைவர் திருமதி தயானா சந்துரு தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதனும் , சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி காயத்திரி கோகுலனும் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
போட்டியில் சம்பியன் வென்ற மாணவனுக்கான கேடயத்தை பிரதம விருந்தினரான கோசலை மதன் வழங்கி வைக்க , 50 ஆயிரம் ரூபாய் பணப் பரிசினை சட்டத்தரணி காயத்திரி கோகுலன் மற்றும் தயானா சந்துரு ஆகியோர் வழங்கி வைத்தனர்.
No comments