Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். போதையை நுகர தயாராகவிருந்த நான்கு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். 

கோண்டாவில் - இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை  இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்து இருந்தனர். 

அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக போதைப்பொருட்களுடன் காணப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் தான் போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments