Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இணுவிலில் புகையிரத்தை மறித்து போராட்டம்


யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தை தொடர்ந்து , பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்து தர கோரி ஊர் மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்த்தில் 3 மாத குழந்தையும் , குழந்தையின் தந்தையான 32 வயதுடைய நபரும் உயிரிழந்தனர். குழந்தையின் தாய் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

குறித்த விபத்து , புகையிரத கடவை பாதுகாவலர் இல்லாததால் தான் ஏற்பட்டுள்ளது. அதனால் புகையிரதக் கடவைக்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை , நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் , கடமை நேரம் கடமையில் இல்லாத பாதுகாப்பு உத்தியோகஸ்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்படுப்பட்டது. 

போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளை , புகையிரதம் வந்த போது , அதனை மறித்த மக்கள்  பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயகரைக்காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் எழுப்பியவாறு பதாதைகளையும் ஏந்தி இருந்தனர். 

அவ்விடத்திற்கு வந்த சுன்னாக பொலிஸார் , போராட்டகாரர்களுடன் பேச்சுக்களை நடாத்தி புகையிரதத்தை அனுப்பி வைத்தனர். 

No comments