இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
ஐந்து நாட்கள் விஜயமாக இந்தியா சென்ற குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்திருந்தனர்.
குறித்த குழுவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், டொக்டர் நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் சென்று இருந்தனர்.
No comments