Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இறங்குதுறை பிரச்னைக்கு தீர்வு கோரி வடக்கு ஆளுநரை சந்தித்த சாவற்காட்டு கடற்தொழிலாளர்கள்


தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் சாவற்காட்டு மீனவர்கள் வடக்கு மாகாண ஆளுநரை இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர்.

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் அளுநர் யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியாமையால் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments