Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 8

Pages

Breaking News

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது. 

அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகளுக்குள் செல்ல இராணுவத்தினர் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளனர். 

காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும்  விடுவிக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேறாத நிலையில் இன்னமும் ஓரிரு நாட்களில் காணிகளில் இருந்து தாம் வெளியேறிய பின்னர் உங்கள் காணிகளுக்குள் நீங்கள் வர முடியும் என தம்மை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியதாக சில காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.