Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முகநூல் பதிவு தொடர்பில் முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள ரி.ஐ.டி யினர்


வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தனை பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துள்ளனர். 

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான  செல்வநாயகம் அரவிந்தனை எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9.00 இற்கு  கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்க வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments