வேக கட்டுப்பாட்டை இழந்த பொலிசாரின் முச்சக்கர வண்டி , கடலில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி , வேக கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. கடலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொலிஸார் மீட்டு கரை சேர்ந்தனர்.
No comments