Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காரைநகரில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்


யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 22 தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கைது செய்ததுடன் , அவர்களின் மூன்று படகுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தினர். 

அதனை தொடர்ந்து அவர்கள் 22 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

No comments