சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீ பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் தாக்கியுள்ளது.
அதனால் தீ பரவல் ஏற்பட்டது. விரைந்து செயற்பட்ட பணியாளர்களால் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கம் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments