Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இனப்பிரச்சனைக்கு 13ஆம் திருத்தமே தீர்வு


தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு 13ஆம் திருத்த சட்டமே தீர்வாக அமையும் , அதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கடலுணவு உற்பத்தி நிலையத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

யாழ்.மாவட்ட பொருளாதார சமூக சுற்றாடல் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான நடவடிக்கையில் ஒருவனாக செயற்பட்டவன் , மீண்டும் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். 

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு , மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் , சிங்களவர்கள் , தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டும். 

இனப்பிரச்சனைக்கு தீர்வாக 13ஆம் திருத்த சட்டமே அடிப்படையாக அமையும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். மாகாண சபைகள் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படும் போது , பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். 

No comments