ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கடற்படை உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் பிரதேச குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான கடற்படை கோப்ரலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய கடற்படை கோப்ரல் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அத்துடன் ஹெரோயின் விநியோகம் செய்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
No comments