Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெற்கில் தொடரும் துப்பாக்கி சூடு - நேற்றும் முதியவர் சுட்டுக்கொலை


எம்பிலிப்பிட்டிய- கொலன்ன பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத  இருவர்  தேயிலை தோட்ட உரிமையாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 63 வயதான நபர் உயிரிழந்துள்ளார் எனவும், இத்துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவ தினத்தன்று உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்றிருந்த சந்தேக நபர்கள், அவரது மனைவியிடம் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அவர்  சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments