புத்தளம் - மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த பாபு துஷ்யந்தினி (வயது 2) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளம் தாய் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments