ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகங்கள் தீவகம் மற்றும் நல்லூர் தொகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தீவக தொகுதிக்கான அலுவலகத்தினை அல்லைப்பிட்டி பகுதியிலும் , நல்லூர் தொகுதிக்கான அலுவலகத்தினை மணியந்தோட்டம் பகுதியிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது சக வேட்பாளர்களான சுதர்சிங் விஜய்காந்த், நீயூட்டன் எட்வேட், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments