Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்த முன்னாள் பெண் போராளி


வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்

வன்னி தேர்தல் மாவட்டத்தில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில்  பெண் வேட்ப்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் போராளியான யசோதினி கருணாநிதி அவர்கள் முல்லைத்தீவில்  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தி தனது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க வந்த நிலையில  முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முல்லைத்தீவு  மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளியான யசோதினி கருணாநிதி மக்கள் மத்தியில் அன்று மக்களுக்காக போராடிய நான் இன்றும் மக்களுக்காக ஜனநாயக வழியில் பெண்ணாக போராட வந்துள்ளேன் எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னதுக்கும்   இலக்கம் அறுக்கும் வாக்களித்து  என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள் நான் தொடர்ந்து எமது மக்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என தெரிவித்தார்.





No comments