Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேவாலயத்தில் புதையல் தோண்டிய 13 பேர் கைது!


தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

தொம்பே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்யன்துடுவ, சியம்பலாப்பே, தெல்கொட, மல்வானை, இம்புல்கொட, தொம்பே, கேகாலை, ஹோமாகம, கடுவலை, கிரிந்திவெல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், கார், வேன் மற்றும் 02 முச்சக்கரவண்டிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments