Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் பயண பைகளில் இருந்து 188 கிலோ கஞ்சா மீட்பு


யாழ்ப்பாண கடற்பரப்பில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குருநகரை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மீன்பிடி படகொன்றை , சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்த போது, படகில் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடற்படையினர் படகினை பரிசோதித்த போது படகில் இருந்து சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா , பயண பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய படகினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.







No comments