Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாடியில் இருந்து விழுந்து ஆஸ்திரேலியப் பிரஜை உயிரிழப்பு


கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் 

51 வயதுடைய ஆஸ்திரேலியப் பிரஜையே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் இந்தத் தொடர்மாடி குடியிருப்பில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments