ஒரு கோடி ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments