Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காதலனுக்கு விஷம் கொடுத்து படுகொலை செய்த காதலிக்கு மரண தண்டனை


காதலனை விஷம் கொடுத்து படுகொலை செய்த சம்பவத்தில் காதலியை குற்றவாளியாக கேரளா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கன்னியாகுமரியில் வசித்த கரீஸ்மா எனும் பெண்,  கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் காதல் கொண்டார். 

காதலன் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார்.

அந்நிலையில் காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளில் கரீஸ்மா முயற்சித்தார். 

இறுதியில் ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.

அந்நிலையில் மீண்டும், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்து, மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கொடுத்தார். 

ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். 

உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். 

இதையடுத்து அவரது குடும்பத்தினர் கரீஸ்மா தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

இந்நிலையில் கேரளா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தது, அதன் போது, க்ரீஷ்மாவின் வயதைக் கருத்தில் கொண்டும், அவர் திருந்தி வாழ தயாராக இருப்பதை சுட்டிக் காட்டியும் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மன்றில் கோரி இருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கில் க்ரீஷ்மாவை குற்றவாளியாக கண்ட மன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

No comments