Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 22

Pages

Breaking News

நாமலுடன் கிராமம் கிராமமாக


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் கிராமம் கிராமமாக' நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது,

நாமலுடன் கிராமம் கிராமமாக திட்டத்தின் முதல் நிகழ்ச்சி நொச்சியாகம பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

 தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதும், அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

மேலும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமங்கள் உட்பட 14 ஆயிரம் கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச இந்த நிகழ்ச்சியில் இணைய உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கு  முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று முக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.