Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேங்காய் கட்டுப்பாட்டுக்கு இராணுவத்தினரும் காரணம்


வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேங்காய் ஏற்றுமதிசெய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கில் மக்களுக்குச்சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்புச் செய்யப்படவில்லை.

புதிய ஆட்சியின் பின்னர் வடக்கு ,கிழக்கில் ஒருசில இராணுவமுகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் இன்றளவில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளன .

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அக்காணிகளை இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments