நாடளாவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டமானது காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றது
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி தாதியர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சு பாதீட்டில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமையால் இன்று இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பாலுமகேந்திரா தெரிவித்தார்.
No comments