Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காரை ஓட்டி சென்ற தாய் மீது குதித்த சிறுமி - கார் விபத்துக்குள்ளானதில் வீதியில் சென்றவர் உயிரிழப்பு


காரை ஓட்டி சென்ற பெண்ணின் இரண்டு வயது மகள், திடீரென தனது தாய் மீது குதித்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஒரு சிறிய லொறி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காரை ஓட்டி வந்த பெண் தனது இரண்டு வயது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்று, களுத்துறையிலிருந்து பாணந்துறை நோக்கி வீட்டுக்கு செல்வதற்காக காரின் பின் இருக்கையில் 2 வயது மகளை இருத்தி விட்டு, காரை செலுத்தியுள்ளார்.

அதன் போது, வாதுவவின் தல்பிட்டி பகுதியில் 2 வயது சிறுமி, காரின் ஓட்டுனர் இருக்கையில் குதித்ததாகவும், இதனால் கார் ஓட்டுநர் இருக்கையில் இருந்த தாயின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, சிறிய லொறி மற்றும்  வீதியில் நின்ற பாதசாரி மீது மோதியது. 

அதில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

No comments