யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
அதேவேளை , வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாக பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்தனர். போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments