யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்தது.
வேளை பலத்த காற்றால் பொன்னாலைப் பகுதியில் தென்னை மரம் ஒன்று முறிந்து மின் வடத்தின் மீது வீழ்ந்தமையால் சில மணி நேரம் மின் தடையும் ஏற்பட்டது.
No comments