கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் , சிறை கூடத்தில் அவரது ஆடையில் , தூக்கில் தொங்கிய நிலையில் , சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments