Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் உயிரிழப்பு


சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம் தெரியவராத நிலையில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments