ராகம – படுவத்தை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை இலக்காகக் கொண்டு இடம்பெற்றதாகவும், இதில் ‘ஆர்மி உபுல்’ என அழைக்கப்படும் நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர், கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
No comments