பொரளையில் உள்ள உடற்பிடிப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பொலிஸ் சிறப்பு பணியக தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், குறித்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்தில் தப்பியோடிய கான்ஸ்டபிளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







No comments