யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அவரது வீட்டை சுற்றிவளைத்த சுன்னாகம் பொலிஸார் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட பெண்ணை சுன்னாகம் பொலிஸ் நிலையதத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






No comments