Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது


மான் இறைச்சி மற்றும் மான்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மான் இறைச்சி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments